இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன் (Joe Biden) , மேற்கண்டவாறு கூறியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பது மகிழ்ச்சியளைபதாக பிரதமர் ரணில் கூறினார். இதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (Joe Biden) தனது நன்றியையும் இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed